Saturday, May 26, 2012

வேலுவின் நீதிக்கதைகள்

கரகாட்டக்காரன் வேலு


ஒரு ஊர்ல திருவிழாவாம், திருவிழாவ பிரம்மாண்டமா பண்றதுக்காக தமிழ்நாட்லையே நம்பர் ஒன் கரகாட்டக்காரன் வேலுவ புக் பண்ணாங்க. திருவிழாவுக்கு முதல் நாளே அவனும் வந்து தயாராக ஆரம்பிச்சிட்டான் ஊர்காரங்களும் அவன நல்லா கவனிச்சிட்டாங்க. திருவிழா அன்னைக்கு மேக் அப்லாம் போட்டுகிட்டு வந்து ரெடியா கோவில் தெருவுக்கு வந்துட்டான். கொஞ்ச நேரம் கழிச்சி நான் கரகாட்டம் ஆட முடியதுன்னிட்டான் ஏண்டான்னு கேட்டா  தெரு கோணலா இருக்குன்னான்....

நீதி: ஆட தெரியாதவன் மட்டும் அல்ல ஆட தெரிந்தவனும் தெரு கோணலா இருக்குன்னு சொல்லுவான்.

காதலித்தான் வேலு



வேலுவும், சந்தியாவும் லவ்வர்ஸ். ரெண்டு பேரும் 2 வருஷமா கதறி கதறி லவ் பண்ணாங்க. ரெண்டு பேரும் போகாத ஊர் இல்ல சுத்தாத இடமில்ல. ஒரு நாள் வேலுவுக்கு பொறந்த நாள் ரெண்டு பேரும் ஐ நாக்ஸ்ல ஈவ்னிங் பட்த்துக்கு போறத பிளான். சந்தியா என்ன பண்ண சர்ப்ரைஸா இருக்கட்டும்னு காலையிலையே கிப்ட் வாங்கிட்டு வேலு விட்டுக்கு போனா. காலிங் பெல் அடிக்கலாம்னு நினைக்கும் போது உள்ள சந்தியான்னு எதோ குரல் கேட்ட்து சரி நம்மள பத்தி என்ன பேசுறான்னு கேப்போம்னு சந்தியா கதவு பக்கத்துல நின்னா “மச்சான் சந்தியாலம் சும்மா டைம் பாஸ்டா அவள யாராச்சும் லவ் பண்ணுவாங்களா?” அப்டின்னு வேலு யார்கிட்டையோ போன்ல பேசிட்டு இருந்தான் இத கேட்ட சந்தியா வேலு லவ்வ தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டா

நீதி: காதலுக்கு கண் இல்ல ஆனா காது இருக்கு


பாலைவனத்தில் வேலு


ஒரு நாள் வேலு பாலைவனத்துல மேற்கு பக்கமா நடந்து போயிட்டு இருந்தான். அவனுக்கு செம தாகம் ஆனா ரொம்ப தூரத்துக்கு தண்ணி இருக்குறதுக்கான அறிகுறியே தெரியல. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டே நடந்து போகும் போது ஒரு ஆள் ஒட்டகத்து மேல உக்காந்துகிட்டு கிழக்கு பக்கமா போயிட்டு இருந்தார். அவர்கிட்ட வேலு “அய்யா இங்க பக்கத்துல எங்கையாவது தண்ணி கிடைக்குமான்னு கேட்டான்” அவர் “தெற்கு பக்கமா ஒரு கிலோ மீட்டர் போனா பாலைவன சோலை இருக்கு அங்க தண்ணி கிடைக்கும்” னு சொன்னார். இவனும் இடது பக்கமா திரும்பி நடக்க ஆரம்பிச்சான் ஒரு கிலோ மீட்டர் தள்ளி அவர் சொன்னா மாதிரியே தண்ணி இருந்த்து வேலுவும் குடிச்சி தாகம் தீர்த்துகிட்டான்.


நீதி: மேற்குல இருந்து இடது பக்கம் திரும்பினா தெற்கு …….


டிஸ்கி: இந்த மாதிரி ஐடியாவ ஒரு பிளாக்ல பார்த்தேன் அதே மாதிரி நாமும் முயற்சி பண்ணி பார்க்கலாம்னு கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணேன் எப்படி இருக்கு?.........





6 comments:

சி.பி.செந்தில்குமார் said...

??>>>ஒரு ஊர்ல திருவிழாவாம், திருவிழாவ பிரம்மாண்டமா பண்றதுக்காக தமிழ்நாட்லையே நம்பர் ஒன் கரகாட்டக்காரன் வேலுவ புக் பண்ணாங்க.

எனி உள்குத்து? :)

நாயோன் said...

எனது நான்கு நிமிடத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உங்கள் தனித்திறமையை பாராட்டுகிறேன்.

x said...

நல்லா இருக்கு...

Unknown said...

அடங்கோ! சூர மொக்கை! அடுத்த முறை கைல மட்டும்போது இருக்கு உங்களுக்கு!

baarathisubbaiyah said...

இது நல்லா இருக்கு

அறிவுக்கரசன்

baarathisubbaiyah said...

இது நல்லா இருக்கு

அறிவுக்கரசன்