Friday, February 27, 2015

குளிர்பெட்டி

என்னைக்காவது குளிர்சாதனப்பெட்டிக்குள்ள (இதுக்கப்புறம் இந்தக்கதைல இத குளிர்பெட்டின்னு சொல்லிக்குவோம்) எட்டி பாத்திருக்கிங்களா?, ம்ம் பாத்திருக்கேனேன்னு சொல்லக்கூடாது. நான் கேக்குறது குளிர்பெட்டி சாத்தி  இருக்கும்போது பார்த்திருக்கிங்களான்னு. சாத்தி இருக்கும்போது எப்படி பாக்க முடியும்னு கேக்க கூடாது. அங்க தான் விசயம் இருக்கு உள்ளுக்குள்ள இருக்க காய்கறி , சாக்லேட்லாம் ஒண்ணோட ஒண்ணு பேசிக்கிட்ருக்கு. இல்ல வித்தியாசமா பாக்காதீங்க. லூசு இல்ல. உண்மையாத்தான் சொல்றேன்.

நான் ஒரு தரம் கூட பார்த்ததில்லையேன்னு யோசிக்காதீங்க. நானும் பார்த்ததில்ல என்ன நடக்குதுன்னா நாம குளிர்பெட்டியோட கதவ திறக்கும்போதோ இல்ல அப்படி யோசிச்ச உடனேயோ அதுங்கள்லாம் நாம எப்படி பாக்குறோமோ அப்படி ஆகிடுதுங்க. இப்போ அடுத்த கேள்வி உனக்கெப்படி தெரியும்?. சொல்றேன் நான் ஒரு நாள் கத்திரிக்காய் வேடம் போட்டுட்ருந்தேன். இது கதைங்குறதால ஏன் கத்திரிக்காய் வேடம் போட்டேன்னுலாம் சொல்லுவேன்னு எதிர்பார்க்ககூடாது.

எங்கம்மா சமையக்கட்டுல இருந்து இன்னும் குளிர்பெட்டிக்குள்ள வைக்காதது அரிசி மூட்டைய மட்டுந்தான். அப்படி ஒரு ஆள் சும்மாருப்பாங்களா , கத்திரிக்காய பார்த்ததும் அய்யோ கெட்டுபோயிடக்கூடாதுன்னு டக்குன்னு தூக்கி குளிர்பெட்டி அலமாரில வச்சிட்டாங்க,  மயக்கம் தெளிஞ்சி (நான் எப்போ மயக்கம் போட்டேன்னு கதைய உன்னிப்பா படிக்கிறவங்க கவனிச்சிருப்பிங்க) நான் எழுந்ததும் செம குளிரு. அப்படியே அரைக்கண்ண திறந்து பாக்குறேன். எல்லா காய்க்கும் கண்ணு முளைச்சிருக்கு அது மட்டுமில்லாம அதுலாம் என்னையே பார்த்துட்டுருக்கு. மறுபடி மயக்கம் போட்டேன் மறுபடி மயக்கம் தெளிஞ்சிடிச்சி. இப்போ கண்ண திறக்காம அப்படியே பயத்துல நடுங்கிட்ருந்தேன் பாக்குறவங்களுக்கு நான் குளிர்ல நடுங்குற மாதிரி தான் தெரியும் ஆனா உண்மைலையே செம பயம் இதுங்கள்லாம் சேர்ந்து என்னை திண்ணுட்டா?. முன்னாடி அதுங்களுக்கு கை,கால்,வாய்லாம் இருக்கும்னு தெரியாது பயந்ததில்லை இப்போ பயமாருக்கு.

நடுங்கிட்ருக்கும்போது அதுங்கள்லாம் பேசுறத கேட்டேன். என்னன்னு பேசுச்சிங்கன்னு கேக்காதீங்க. 10வது படிக்கும்போது எல்லா பாடத்திலையும் 90க்கு மேல இங்கிலிஸ்ல மட்டும் 76. ஆக அதுங்கள்லாம்  இங்கிலிசுல பேசிச்சான்னு யோசிக்கவும் கூடாது. எனக்கு தமிழ் தவிர வேற எதும் புரியாதுங்குறது தான். இந்த பத்தியோட சாராம்சம்.

எவ்ளோ நேரம் தான் அப்படி உக்காந்திட்ருக்குறது. குளிர், பயமா வேற இருக்கு. சரின்னு கதவ திறக்குற மாதிரி மனசுல நினைச்சிக்கிட்டேன். அவ்ளோ தான் எல்லா பொருளும் நாம எப்படி பாக்குறோமோ அப்படி மாறிடிச்சிங்க. ஆனா என்னால வெளிய போக முடியாது ஏன்னு சொல்லுங்க ஏன்னா நான் தான் கத்திரிக்காய மாறி இருக்கேனே. அம்மா வர்ற வரை இப்படியே காத்திருக்க வேண்டியது தான்.

அடுத்த முறை குளிர்பெட்டிய திறந்தா எதாவது ஒரு பொருள் நீங்க வெச்ச இடத்த விட்டு கொஞ்சமே கொஞ்சம் நகர்ந்திருக்கும் பாருங்க.