Monday, June 25, 2018

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன் எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் எழுதிய நாவல். சில மோசமான அனுபவங்கள் காரணமாக முகநூல் வழி அறிமுகமான எழுத்தாளர்களை தவிர்த்தே வந்தேன்.

இப்புத்தக வெளியீட்டு விழாவில் ரமேஷ் வைத்யாவின் நாவல் பற்றிய அறிமுகம் மிக சுவாரசியம் என்றாலும் அது புத்தகம் வாங்கும் ஆவலை தூண்டவில்லை. நண்பனிடம் இது பற்றி நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த போது அவன் சொன்னது "அதாண்டா தொழில் நேக்கு, உருட்டு அப்படி".

முக நூலில் இப்படி ஒரு பதிவு பார்த்தேன் "உடல்  நினைவில் காடுள்ள மிருகம் - ஆப்பிளுக்கு முன் நாவலிலிருந்து", நாவலில் இது மட்டுமே இருக்கிறது, இதை தவிர இந்த வரிகளுக்கு வேறு எந்த விளக்கமும் இல்லையெனில் எழுத்தாளருக்கு ஒரு கைதட்டல்.

நக்கீரன் எழுதிய நாடோடிகள் நாவலில் வரும் வரிகள் "நினைவில் காடுள்ள மிருகம், எளிதில் அடங்குவதில்லை", எழுத்தாளர் இவ்வாறு சொல்லவருகிறார் ",உடல் நினைவில் காடுள்ள மிருகம், அது எளிதில் அடங்குவதில்லை" , ஆக எழுத்தாளர் ஒரு குறிப்பை (அதுவும் மற்றொரு நாவலின் வரி) மட்டும் சொல்லிவிட்டு மீதத்தை வாசகனே பார்த்துக்கொள்ளட்டும் என நினைக்கிறார். பொதுவாய் நம் நாவல்கள் காட்சிகளின் விவரிப்பே, குறிப்பை மட்டும் சொல்லிவிட்டு வாசகன் பார்த்துக்கொள்ளட்டும் என நினைக்கும் நாவல்கள் மிகக்குறைவு.

ஆப்பிளுக்கு முன் அந்த வகை நாவல் என்றால் விரைவில் வாங்கிவிடுவேன்......