Saturday, May 26, 2012

வேலுவின் நீதிக்கதைகள்

கரகாட்டக்காரன் வேலு


ஒரு ஊர்ல திருவிழாவாம், திருவிழாவ பிரம்மாண்டமா பண்றதுக்காக தமிழ்நாட்லையே நம்பர் ஒன் கரகாட்டக்காரன் வேலுவ புக் பண்ணாங்க. திருவிழாவுக்கு முதல் நாளே அவனும் வந்து தயாராக ஆரம்பிச்சிட்டான் ஊர்காரங்களும் அவன நல்லா கவனிச்சிட்டாங்க. திருவிழா அன்னைக்கு மேக் அப்லாம் போட்டுகிட்டு வந்து ரெடியா கோவில் தெருவுக்கு வந்துட்டான். கொஞ்ச நேரம் கழிச்சி நான் கரகாட்டம் ஆட முடியதுன்னிட்டான் ஏண்டான்னு கேட்டா  தெரு கோணலா இருக்குன்னான்....

நீதி: ஆட தெரியாதவன் மட்டும் அல்ல ஆட தெரிந்தவனும் தெரு கோணலா இருக்குன்னு சொல்லுவான்.

காதலித்தான் வேலு



வேலுவும், சந்தியாவும் லவ்வர்ஸ். ரெண்டு பேரும் 2 வருஷமா கதறி கதறி லவ் பண்ணாங்க. ரெண்டு பேரும் போகாத ஊர் இல்ல சுத்தாத இடமில்ல. ஒரு நாள் வேலுவுக்கு பொறந்த நாள் ரெண்டு பேரும் ஐ நாக்ஸ்ல ஈவ்னிங் பட்த்துக்கு போறத பிளான். சந்தியா என்ன பண்ண சர்ப்ரைஸா இருக்கட்டும்னு காலையிலையே கிப்ட் வாங்கிட்டு வேலு விட்டுக்கு போனா. காலிங் பெல் அடிக்கலாம்னு நினைக்கும் போது உள்ள சந்தியான்னு எதோ குரல் கேட்ட்து சரி நம்மள பத்தி என்ன பேசுறான்னு கேப்போம்னு சந்தியா கதவு பக்கத்துல நின்னா “மச்சான் சந்தியாலம் சும்மா டைம் பாஸ்டா அவள யாராச்சும் லவ் பண்ணுவாங்களா?” அப்டின்னு வேலு யார்கிட்டையோ போன்ல பேசிட்டு இருந்தான் இத கேட்ட சந்தியா வேலு லவ்வ தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டா

நீதி: காதலுக்கு கண் இல்ல ஆனா காது இருக்கு


பாலைவனத்தில் வேலு


ஒரு நாள் வேலு பாலைவனத்துல மேற்கு பக்கமா நடந்து போயிட்டு இருந்தான். அவனுக்கு செம தாகம் ஆனா ரொம்ப தூரத்துக்கு தண்ணி இருக்குறதுக்கான அறிகுறியே தெரியல. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டே நடந்து போகும் போது ஒரு ஆள் ஒட்டகத்து மேல உக்காந்துகிட்டு கிழக்கு பக்கமா போயிட்டு இருந்தார். அவர்கிட்ட வேலு “அய்யா இங்க பக்கத்துல எங்கையாவது தண்ணி கிடைக்குமான்னு கேட்டான்” அவர் “தெற்கு பக்கமா ஒரு கிலோ மீட்டர் போனா பாலைவன சோலை இருக்கு அங்க தண்ணி கிடைக்கும்” னு சொன்னார். இவனும் இடது பக்கமா திரும்பி நடக்க ஆரம்பிச்சான் ஒரு கிலோ மீட்டர் தள்ளி அவர் சொன்னா மாதிரியே தண்ணி இருந்த்து வேலுவும் குடிச்சி தாகம் தீர்த்துகிட்டான்.


நீதி: மேற்குல இருந்து இடது பக்கம் திரும்பினா தெற்கு …….


டிஸ்கி: இந்த மாதிரி ஐடியாவ ஒரு பிளாக்ல பார்த்தேன் அதே மாதிரி நாமும் முயற்சி பண்ணி பார்க்கலாம்னு கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணேன் எப்படி இருக்கு?.........





Thursday, May 24, 2012

ctrl+c ctrl+v

சும்மா அப்போ அப்போ நான் கீச்சின சில கீச்சுகள்ல இருந்து சிலத ctrl+c , ctrl+v பண்ணியிருக்கேன்


1.உபயம்னு கோவிலுக்கு டியுப் லைட்ல பேர் எழுதி தர்றவன கூட மன்னிச்சிடலாம் ஆன குண்டு பல்புல இனிஷியல போட்டு தர்றவன எல்லாம் என்ன பண்றது..


2.தாம்பரம் வந்தா கொஞ்சம் சொல்லுங்கன்னு சொல்லிட்டு சொன்னவன் தூங்கிடுவான் அவனுக்காக நாம முழிச்சிட்டே வர வேண்டியிருக்கும்


3,.பேஷன்ட் கோமவுல இருந்து திரும்ப ஒரே வழி திரும்ப திரும்ப அவங்கள கூப்பிடுறது தான் #தங்கம் சீரியல்


4."நவின்” ன்னு கூகுள்ல சர்ச் பண்ணா என்னோட பேரு மொத பக்கத்திலையே வருது இந்த ஒரு விஷயத்துக்காவது ட்விட்டர்ல இருக்கலாம்....

Tuesday, May 22, 2012

கல்விப்பண்ணைகள்

ஒரு வழியாய் இந்த வருட பிளஸ் 2 ரிசல்ட் வந்து விட்டது வழக்கம் போல் மாணவிகளே முதல் இடம்,ஏழையாய் மாறி டாக்டருக்கு சேவை செய்வேன் போன்ற செய்திதாள் பழைய மாவுகளை விட்டுவிட்டு பார்த்தால் இன்னுமொரு செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

அது நாமக்கல் மாவட்டம் மாநில ரேங்கை தட்டி சென்றிருப்பது, அதுவும் மொத்தமாய் ஆறு இடங்கள் ஒன்றிரண்டு வருடங்களை தவிர பெரும்பாலும் தென் தமிழக குறிப்பாக சேலம்,நாமக்கல்,கோவை,போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளே அதிகம் மாநில ரேங்க் பெறுகின்றனர்.



சரி நல்ல விஷயம் தானேன்னு பார்த்தா