கரகாட்டக்காரன் வேலு
ஒரு ஊர்ல திருவிழாவாம், திருவிழாவ பிரம்மாண்டமா பண்றதுக்காக தமிழ்நாட்லையே நம்பர் ஒன் கரகாட்டக்காரன் வேலுவ புக் பண்ணாங்க. திருவிழாவுக்கு முதல் நாளே அவனும் வந்து தயாராக ஆரம்பிச்சிட்டான் ஊர்காரங்களும் அவன நல்லா கவனிச்சிட்டாங்க. திருவிழா அன்னைக்கு மேக் அப்லாம் போட்டுகிட்டு வந்து ரெடியா கோவில் தெருவுக்கு வந்துட்டான். கொஞ்ச நேரம் கழிச்சி நான் கரகாட்டம் ஆட முடியதுன்னிட்டான் ஏண்டான்னு கேட்டா தெரு கோணலா இருக்குன்னான்....
நீதி: ஆட தெரியாதவன் மட்டும் அல்ல ஆட தெரிந்தவனும் தெரு கோணலா இருக்குன்னு சொல்லுவான்.
காதலித்தான் வேலு
நீதி: காதலுக்கு கண் இல்ல ஆனா காது இருக்கு
பாலைவனத்தில் வேலு
ஒரு நாள் வேலு பாலைவனத்துல மேற்கு பக்கமா நடந்து போயிட்டு இருந்தான். அவனுக்கு செம தாகம் ஆனா ரொம்ப தூரத்துக்கு தண்ணி இருக்குறதுக்கான அறிகுறியே தெரியல. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டே நடந்து போகும் போது ஒரு ஆள் ஒட்டகத்து மேல உக்காந்துகிட்டு கிழக்கு பக்கமா போயிட்டு இருந்தார். அவர்கிட்ட வேலு “அய்யா இங்க பக்கத்துல எங்கையாவது தண்ணி கிடைக்குமான்னு கேட்டான்” அவர் “தெற்கு பக்கமா ஒரு கிலோ மீட்டர் போனா பாலைவன சோலை இருக்கு அங்க தண்ணி கிடைக்கும்” னு சொன்னார். இவனும் இடது பக்கமா திரும்பி நடக்க ஆரம்பிச்சான் ஒரு கிலோ மீட்டர் தள்ளி அவர் சொன்னா மாதிரியே தண்ணி இருந்த்து வேலுவும் குடிச்சி தாகம் தீர்த்துகிட்டான்.
நீதி: மேற்குல இருந்து இடது பக்கம் திரும்பினா தெற்கு …….
டிஸ்கி: இந்த மாதிரி ஐடியாவ ஒரு பிளாக்ல பார்த்தேன் அதே மாதிரி நாமும் முயற்சி பண்ணி பார்க்கலாம்னு கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணேன் எப்படி இருக்கு?.........