Wednesday, August 31, 2011

மங்காத்தா இரண்டாவது பில்லாவா -விமர்சனம்

அஜித் அம்பதாவது படம் என்று பெரும் எதிர்பார்ப்பிலும்(அப்படி தான் சொன்னாங்க ) பெரும் பிரச்சனைகளிலும் வந்திருக்கும் படம் ...

அம்பதாவது படத்தில் சோலோவாக நடிக்காமல் கும்பலோடு நடித்த மனமுதிர்சிக்காக அஜித்தை பாராட்டலாம் .படத்தில் சற்று வயதான  போலிஸ் அதிகாரியாக  வருகிறார் அஜித் (தொப்பைக்கு காரணம் சொல்லியாச்சி அப்புறம் என்னடா ஹீரோ தொப்பயோட வரார்னு கேக்க கூடாது).கதை என்னவென்றால் ஐபிஎல் ஆட்டத்தில் சூதாட்ட பணம் ஜெயபிரகாஷ் மூலம் 500 கோடி கைமாற இருக்கிறது அதை அவரிடம் வேலை பார்க்கும் வைபவ் தனது முன்று நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்க முயற்சிக்க அவர்களுடன் இணைகிறார் அஜித்.பணத்தையும் கொள்ளை அடித்து விட அந்த பணத்தை ஐந்து பேரில் இரண்டு பேர் மட்டும் ஏமாற்றி எடுத்து சென்று விடுகின்றனர் இதனால் அஜீத் கடுப்பாகி செய்யும் வேலைகளே மீதி கதை