Posts

Showing posts from March, 2015

அரசூர் வம்சம்

எந்த ஒரு இனத்துக்கும், சமூகத்திற்கும் மிகக்கடினமான விடயம் தங்கள் பண்பாடு , கலாச்சாரத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது. இப்படி பாதுகாக்கவோ கடத்தவோ முடியாமல் அழிந்து போன இனம், மொழி பல. ஆனால் அப்படி தங்கள் கலச்சாரத்தை பாதுகாத்து கொள்ளும் இனங்கள் தனித்து நிற்கும். விமர்சனம் எத்தனையோ இருந்தாலும் யூதர்களை எனக்கு பிடிக்க முக்கிய காரணமே இது தான். யூத மதத்தில் மதம் மாறுதல் என்ற ஒன்றே இல்லை பிறப்பால் மட்டுமே யூத மதத்தினராய் இருக்க முடியும் அப்படி இருந்தும் அரசியல் நெருக்கடிகள், யூத மதத்திலிருந்து பிற மதத்திற்கு மதமாற்றங்கள், உலகம் முழுக்க எப்போதும் விரட்டியடிப்பு என பல துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் யூத பண்பாடு, கலாச்சாரம் என்ற ஒன்றை எப்போதும் அவர்கள் விட்டுக்கொடுத்ததேயில்லை. அதனால் தான் இன்று இஸ்ரேல் என்ற தனி நாடு அவர்களுக்கு கிட்டியது. அரசூர் வம்சம் சுமார் 150-200 வருடம் முன்னர் நடக்கும் கதை. வாரிசில்லா, அதிகாரமில்லா ராஜாவும் , அவர் அரண்மனை அருகே வசிக்கும்  ராஜாவை விட வசதியான  புகையிலை விற்கும் பிராமணக்குடும்பமும் தான் கதைக்களம். இருத்தல் வேண்டி புகையிலை விற...

நகரம்

எப்போதும் பயணிகளோடு என் ஏக்கத்தையும் நிரப்பி செல்கிறது குளிர்சாதான பேருந்து, என் இயலாமையை உள்ளிழுத்துக்கொண்டு சிரிக்கிறது வணிகவளாகத்தின் விலை அட்டை, ஏளனமாய்த்தான் தோன்றுகிறது உணவகத்தின் கண்ணாடி சுவருக்குள் யுவதியின் விழிகள், சிநேகம் பாவிக்க மறுக்கின்றன எனது காலணியோடு வழுக்கு தரைகள், பெரும்பாலும் வாட்ச்மேனோடே முடிந்து விடுகின்றன எனது நேர்முகத்தேர்வுகள், ஆனாலும் இந்நகரம் எனக்கும் வைத்திருக்கிறது பத்து ரூபாய்க்கு இரண்டு தோசையும் இராசனாய் நகர்வலம் வர ஐம்பது ரூபாய் டிக்கெட்டும் ...