Posts

Showing posts from 2015

அன்று

இந்த சிறுகதை எழுத்தாளர் சரவண கார்த்திகேயனால் நடத்தப்படும் தமிழ் மின்னிதழில் மே மாதம் வெளியானது ______________________________________________ “என்ன தம்பி ஆபிஸ்லருந்து சீக்கிரம் கிளம்பிட்ட போல?”, “உள்ள ஏறி வாங்க, இல்லாட்டி இறங்கிக்கோங்க”, “சார், இந்த பேக கொஞ்சம் வச்சிக்க முடியுமா?”, ”இடிக்காம நில்லுப்பா”, “பெருங்குடிலருந்து பஸ்ல வந்தினுருக்கேன் இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்” “பல்லாவரம் போகுமா?” மேற்கண்ட உரையாடலைலாம் பாத்ததும் இது ஒரு பேருந்து பயணம் சம்பந்தமான கதைன்னு நினைச்சிருப்பிங்க. அப்படித்தான் நானும் நினைச்சிருந்தேன் அவன் (இல்லை இல்லை இப்போதைக்கு அவர்),  அவர் வந்து எம்பக்கத்துல உக்காரும் வரை. இது வரைக்கும் படிச்சதிலிருந்து உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நான் தேவையில்லாம எதையும் சொல்ல மாட்டேன்னு அதானால அவர் எப்படி இருந்தார்னுலாம் சொல்லுவேன்னு எதிர்பார்க்காதீங்க. சிவராஜ் வைத்திய பரம்பரைல எப்படி வரிசையா ஆம்பள பசங்களாவே பொறக்குறாங்கன்னு பயங்கரமா யோசிச்ட்ருக்கும்போது தான். “எங்கருந்து தம்பி வர்றீங்க” அவர்  குரல், “கந்தன் சாவடி சார...

அரசூர் வம்சம்

எந்த ஒரு இனத்துக்கும், சமூகத்திற்கும் மிகக்கடினமான விடயம் தங்கள் பண்பாடு , கலாச்சாரத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது. இப்படி பாதுகாக்கவோ கடத்தவோ முடியாமல் அழிந்து போன இனம், மொழி பல. ஆனால் அப்படி தங்கள் கலச்சாரத்தை பாதுகாத்து கொள்ளும் இனங்கள் தனித்து நிற்கும். விமர்சனம் எத்தனையோ இருந்தாலும் யூதர்களை எனக்கு பிடிக்க முக்கிய காரணமே இது தான். யூத மதத்தில் மதம் மாறுதல் என்ற ஒன்றே இல்லை பிறப்பால் மட்டுமே யூத மதத்தினராய் இருக்க முடியும் அப்படி இருந்தும் அரசியல் நெருக்கடிகள், யூத மதத்திலிருந்து பிற மதத்திற்கு மதமாற்றங்கள், உலகம் முழுக்க எப்போதும் விரட்டியடிப்பு என பல துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் யூத பண்பாடு, கலாச்சாரம் என்ற ஒன்றை எப்போதும் அவர்கள் விட்டுக்கொடுத்ததேயில்லை. அதனால் தான் இன்று இஸ்ரேல் என்ற தனி நாடு அவர்களுக்கு கிட்டியது. அரசூர் வம்சம் சுமார் 150-200 வருடம் முன்னர் நடக்கும் கதை. வாரிசில்லா, அதிகாரமில்லா ராஜாவும் , அவர் அரண்மனை அருகே வசிக்கும்  ராஜாவை விட வசதியான  புகையிலை விற்கும் பிராமணக்குடும்பமும் தான் கதைக்களம். இருத்தல் வேண்டி புகையிலை விற...

நகரம்

எப்போதும் பயணிகளோடு என் ஏக்கத்தையும் நிரப்பி செல்கிறது குளிர்சாதான பேருந்து, என் இயலாமையை உள்ளிழுத்துக்கொண்டு சிரிக்கிறது வணிகவளாகத்தின் விலை அட்டை, ஏளனமாய்த்தான் தோன்றுகிறது உணவகத்தின் கண்ணாடி சுவருக்குள் யுவதியின் விழிகள், சிநேகம் பாவிக்க மறுக்கின்றன எனது காலணியோடு வழுக்கு தரைகள், பெரும்பாலும் வாட்ச்மேனோடே முடிந்து விடுகின்றன எனது நேர்முகத்தேர்வுகள், ஆனாலும் இந்நகரம் எனக்கும் வைத்திருக்கிறது பத்து ரூபாய்க்கு இரண்டு தோசையும் இராசனாய் நகர்வலம் வர ஐம்பது ரூபாய் டிக்கெட்டும் ...

குளிர்பெட்டி

என்னைக்காவது குளிர்சாதனப்பெட்டிக்குள்ள (இதுக்கப்புறம் இந்தக்கதைல இத குளிர்பெட்டின்னு சொல்லிக்குவோம்) எட்டி பாத்திருக்கிங்களா?, ம்ம் பாத்திருக்கேனேன்னு சொல்லக்கூடாது. நான் கேக்குறது குளிர்பெட்டி சாத்தி  இருக்கும்போது பார்த்திருக்கிங்களான்னு. சாத்தி இருக்கும்போது எப்படி பாக்க முடியும்னு கேக்க கூடாது. அங்க தான் விசயம் இருக்கு உள்ளுக்குள்ள இருக்க காய்கறி , சாக்லேட்லாம் ஒண்ணோட ஒண்ணு பேசிக்கிட்ருக்கு. இல்ல வித்தியாசமா பாக்காதீங்க. லூசு இல்ல. உண்மையாத்தான் சொல்றேன். நான் ஒரு தரம் கூட பார்த்ததில்லையேன்னு யோசிக்காதீங்க. நானும் பார்த்ததில்ல என்ன நடக்குதுன்னா நாம குளிர்பெட்டியோட கதவ திறக்கும்போதோ இல்ல அப்படி யோசிச்ச உடனேயோ அதுங்கள்லாம் நாம எப்படி பாக்குறோமோ அப்படி ஆகிடுதுங்க. இப்போ அடுத்த கேள்வி உனக்கெப்படி தெரியும்?. சொல்றேன் நான் ஒரு நாள் கத்திரிக்காய் வேடம் போட்டுட்ருந்தேன். இது கதைங்குறதால ஏன் கத்திரிக்காய் வேடம் போட்டேன்னுலாம் சொல்லுவேன்னு எதிர்பார்க்ககூடாது. எங்கம்மா சமையக்கட்டுல இருந்து இன்னும் குளிர்பெட்டிக்குள்ள வைக்காதது அரிசி மூட்டைய மட்டுந்தான். அப்படி ஒரு ஆள் சும்மாருப்பா...