Wednesday, December 26, 2012

வேலுவின் நீதிக்கதைகள் -2


வேலுவின் நீதிக்கதைகள் பற்றி அறியாதவர்களுக்கு வேலுவின் நீதிக்கதைகள் -1

வேலுவே எழுதிய நீதிக்கதை :




ஒரு காட்டுல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துட்டு இருந்தாளாம். காட்டு மிருகமெல்லாம் அங்க வந்து வடை வாங்கி சாப்பிட்டு போகுமாம்.அந்த காட்டுல ஒரு காக்காவும் இருந்துச்சாம். அதுக்கு வடை சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசையாம். ஆனா பாவம் அது கிட்ட வடை வாங்க காசே இல்லையாம். என்ன பண்ணலாம்னு சோகமா யோசிச்சிட்டு இருக்கும் போது ஆமை வந்து என்ன பிரச்சனை ஏன் சோகமா இருக்கேன்னு கேட்டுச்சாம். காக்காவும் வடைய பத்தி சொல்லுச்சாம். ஆமை, நீ பாட்டி அசந்த நேரம் பார்த்து வடைய தூக்கிட்டு வந்துடுன்னுச்சாம்.

ரெண்டு நாள் கழிச்சி ஆமை வந்துச்சாம் என்ன ஆச்சு வடையை தூக்கிட்டியான்னு கேட்டுச்சாம். அட நீ வேற விடப்பான்னுச்சாம். ஏம்ப்பா என்ன ஆச்சுன்னுச்சாம் ஆமை. நான் வடைய தூக்க போகும் போதெல்லாம் மாட்டிக்கிறேன் எனக்கு லாங்க் சைட் வேறையா கிட்ட போகும் போது எது வடை சட்டி எது எண்ணெய் சட்டின்னே தெரிய மாட்டேங்குது. ஒண்ணு பாட்டிக்கிட்ட மாட்டிக்கிறேன் இல்லைன்னா எண்ணெய் சட்டில சூடு வச்சிக்கிறேன் அப்படின்னுச்சாம் காக்கா.
சரி ஒண்ணு பண்ணுவோம் என்னை தூக்கிட்டு நீ பற எனக்கு தான் கண்ணு நல்லா தெரியுமே நான் வடைய திருடுறேன். ரெண்டு பேரும் ஆளுக்கு பாதியா வடைய ஷேர் பண்ணிப்போம்னுச்சாம் ஆமை. காக்காவும் ஒகேன்னு சந்தோஷமா சொல்லிச்சாம்.

அடுத்த நாள் ஆமைய தூக்கிட்டு காக்காவும் வடையை திருட போச்சாம். வடை சட்டிக்கு கிட்ட போகும் போது வெயிட் தாங்காம ஆமையை கீழ போட்டுடுச்சாம். ஆமை பாட்டி வச்சிருந்த மாவு சட்டிக்குள்ள விழுந்துடுச்சாம். பாட்டிக்கும் லாங்க் சைட்டாம் சோ பாட்டி ஆமை விழுந்தத கவனிக்காம ஆமைய மாவுல பொரட்டி அப்படியே எண்ணெய் சட்டிக்குள்ள போட்டுட்டாங்களாம். 

நீதி:அப்போ கண்டுபிடிச்சது தான் ஆமை வடை  

காட்டுக்குள்ளே பயங்கரம்... 



வேலுவும் அவனோட ஃபிரெண்டும் சேர்ந்து ஒரு நாள் போரடிக்குதுன்னு காட்டுக்கு ட்ரெக்கிங் போனாங்களாம். காட்டுக்குள்ள ரொம்ப தூரம் வேடிக்கை பார்த்துட்டே போயிட்டு இருந்தாங்களாம். ஒரு இடத்தில குளம் ஒண்ணு இருந்துச்சாம். அதுல இறங்கி குளிக்க போனாங்களாம். கால தண்ணில வைக்க போகும் போது சிறுத்தையோட சத்தம் கேட்டுச்சாம். திரும்பி பார்த்தா நிஜாமாவே சிறுத்தை நின்னுட்டு இருந்துச்சாம். அதுவும் தண்ணி குடிக்க வந்திருக்கும் போல. வேலுவும் அவன் பிரெண்டும் அத பார்த்துட்டு பயந்து ஓடினாங்களாம். ஓடும் போது வேலு, “மச்சி சிறுத்தை கிட்ட எல்லாம் ஓடி தப்பிக்க முடியாது நாம எதாவது மரத்து மேல ஏறிக்கலாம்“னு அவன் பிரெண்டுகிட்ட சொல்லிட்டு குடுகுடுன்னு போய் ஒரு மரத்துல ஏறிக்கிட்டானாம். அவன் பிரெண்டும் பின்னாடியே வந்து மரத்துல ஏறினானாம். துரத்திட்டு வந்த சிறுத்தை பொறுமையா மரத்து மேல ஏறி வந்து கிட்ட இருந்த வேலுவோட பிரெண்ட சாகடிச்சி துக்கிட்டு  போயிடிச்சாம்.........


நீதி :சிறுத்தைக்கு மரம் ஏற தெரியும்......

No comments: